என் பிள்ளையை நான் தொலைக்கவில்லை.
என் கணவர் எனக்கு வேண்டும். தந்தையை மீட்டுத்தாருங்கள். எமது அண்ணா எங்கே? சகோதரன் எங்கே? சகோதரி எங்கே? தோழன், தோழிகள் எங்கே?துப்பாக்சிச் சத்தங்கள் ஓய்ந்தாலும் இத்தகைய அவலக்குரல்கள் இன்னமும் வட,கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் அடங்கவில்லை.
ஆயுதப் போர் முடிந்து 5 ஆண்டுகள் கடந்தும் உறவுகளைக் காணாது தேடி அலையும் அவலம் தொடர்ந்துகொண்டுதான இருக்கிறது.